கர்நாடகாவில் கொரோனா பாதிப்பால் இருவர் உயிரிழப்பு !

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பால் இருவர் உயிரிழப்பு !

Share it if you like it

கடந்த 24 மணி நேரத்தில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக கேரளாவில் 353 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 954 ஆக உள்ளது. மேலும், 495 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், கர்நாடகாவில் 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 464 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 44 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இருவர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவில் 37 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 11 பேர் மீண்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 18 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 5 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார்.


Share it if you like it