எதுக்கு இந்த வெல்லம் – தி.மு.க.வை வெளுத்து வாங்கிய பெண்கள்..!

எதுக்கு இந்த வெல்லம் – தி.மு.க.வை வெளுத்து வாங்கிய பெண்கள்..!

Share it if you like it

தி.மு.க அரசு வழங்கிய பொங்கல் பரிசு பையில் தரமற்ற வெல்லம்.

பொங்கல் பண்டிகையை கொண்டாட, தமிழக மக்கள் தற்பொழுது தயாராக வருகின்றனர். பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு, பையினை தமிழக அரசு விநியோகம் செய்து வருகிறது. ரவையில் வண்டு, புளியில் பல்லி, அரிசியில் வண்டு, தரமற்ற வெல்லம், என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆளும் கட்சி மீது பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெண்கள் சிலர் தங்களது கோவத்தை வெளிப்படுத்தி பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

1000 ரூபாய் வழங்கி இருந்தால், பொங்கலை சந்தோஷமாக, கொண்டாடி இருப்போம். எதிர்கட்சியாக இருந்த பொழுது, பொதுமக்களுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று, பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய, உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது எங்கே? இருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it