கோவை மக்கள் தி.மு.க-வை ஏமாற்றி விட்டதாக உதயநிதி ஸ்டாலின் வேதனை.
2021-ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. சேலம், கோவை, உள்ளிட்ட சில மாவட்டங்களில் தி.மு.க கூட்டணி படுதோல்வியை தழுவியது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றியினை பெற்றதது. இந்நிலையில் சேப்பாக்கம்- திருவல்லிகேணி தி.மு.க எம்.எல்.ஏ-வும் தமிழக முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கோவை மக்கள் தங்களை ஏமாற்றி விட்டதாக ஆதங்கப்பட்டு பேசிய செய்தியினை பிரபல ஊடகமான நியூஸ்-7 தனது இணைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.