பாரத பிரதமர் மோடி முயற்சியால் உக்ரைனில் மீண்டும் போர் நிறுத்தம்!

பாரத பிரதமர் மோடி முயற்சியால் உக்ரைனில் மீண்டும் போர் நிறுத்தம்!

Share it if you like it

பாரத பிரதமர் மோடியின் முயற்சியால், உக்ரைனில் 5 மாநிலங்களில் போர் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், நேட்டோவுடன் இணையும் முடிவை கைவிடுவதாக உக்ரைன் அறிவித்திருப்பதால், போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

நேட்டோ நாடுகளுடன் இணையும் உக்ரைன் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது. இதனால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் உக்ரைன் சிக்கித் தவித்து வருகின்றனர். இதில், இந்தியர்கள்தான் அதிகம். ஆகவே, இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்களை மீட்க உதவுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம், பாரத பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இதையடுத்து, இந்தியர்கள் அதிகம் வசிக்கும் உக்ரைனின் முக்கிய நகரங்களில் போர் நிறுத்தத்தை அறிவித்தார் புடின். இதைத் தொடர்ந்து, உக்ரைனில் இருந்த ஏராளமான இந்தியர்கள் மீட்கப்பட்டனர். எனினும், சில முக்கிய நகரங்களில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்பது சவாலாக இருந்தது. ஆகவே, ரஷ்ய அதிபர் படினுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார் பாரத பிரதமர் மோடி. இதன் தொடர்ச்சியாக, உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், மரியபோல, சுமி, செர்னிஹிவ் ஆகிய 5 மாநிலங்களில் போர் நிறுத்தம் செய்திருக்கிறது ரஷ்யா.

இது ஒரு புறம் இருக்க போரை நிறுத்த உதவுமாறு பாரத பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளில் முக்கியத் தலைவர்கள் சிலருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் உக்ரைன் அதிபர் வளோடிமிர் ஒலெக்சாந்திரவிச் ஜெலன்ஸ்கி. இதையடுத்து, பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சுமுகத் தீர்வு எட்டப்பட்டதாகத் தெரிகிறது. அதாவது, நேட்டோ நாடுகளுடன் இணையும் முடிவை மாற்றிக் கொள்ள உக்ரைன் அதிபர் சம்மதம் தெரிவித்திருக்கிறார். மேலும், ரஷ்யாவின் விருப்பமான டொன்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பிரதேசங்கள் பற்றி பேசி சமரசம் செய்துகொள்ளத் தயார் என்றும் உக்ரைன் அதிபர் அறிவித்திருக்கிறார். ஆகவே, உக்ரைன் மீதான ரஷ்ய போர் முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி போர் நிறுத்தம் ஏற்பட்டால், அது பாரத பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படும். காரணம், மோடியைத் தவிர வேறு எந்த நாட்டுத் தலைவர்களும், ரஷ்ய அதிபர் புடினுடனும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it