சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடிதான் காரணம் என அக்கட்சியின் தலைவர்கள் புகழ்வது வழக்கம். ஆனால் பாஜகவையும் பிரதமர் மோடியையும் பரம எதிரியாக கருதும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சி எம்.பியான சுனில் குமார் பின்டுதான் மோடியை அப்படி புகழ்ந்து தள்ளியிருக்கிறார். பிரதமர் மோடி நினைத்தால் அத்தனையும் சாத்தியமாகும் என்பதுதான் ஜேடியூ எம்பி சுனில் குமார் பின்டுவின் கருத்து.
இந்த கருத்து ஜேடியூ தலைவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ஜேடியூ கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் கூறுகையில், அப்படி எல்லாம் பிரதமர் மோடியை பாராட்டுகிறவர் ஜேடியூவில் இருக்க வேண்டியது இல்லை. எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் விருப்பப்படி முடிவெடுக்கலாம். லோக்சபா தேர்தலுக்கு முன்னரே முடிவெடுத்து கொள்ளட்டும் என்றார்.