மாஸ் காட்டும் உ.பி முதல்வரின் ”மிஷன் ஜூன்”.!

மாஸ் காட்டும் உ.பி முதல்வரின் ”மிஷன் ஜூன்”.!

Share it if you like it

உத்திரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்தியநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெண்களை ஊக்குவிக்கும் விதமாக “பிங்க் தடுப்பூசி மையம்” அமைத்து உள்ளது. உ.பி-யில் உள்ள 75 மாவட்டங்களிலும் தடுப்பூசி மையம் அமைத்து. இதன் பணிகளை துவங்க., கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மறுஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜூன் 7-ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் பெண்களுக்கான சிறப்பு தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தாய்மார்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் “கட்டாயமாக நாம் வெல்வோம்” என்று தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள சுமார் 75 மாவட்டங்களிலும் மிஷன் ஜூன் எனும் பெயரில் சுமார் 1கோடி நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it