உ.பி.யில் மதமாற்ற மோசடி: கைது செய்யப்பட்ட ஷாநவாஸ்கானுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு!

உ.பி.யில் மதமாற்ற மோசடி: கைது செய்யப்பட்ட ஷாநவாஸ்கானுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு!

Share it if you like it

உத்தரப் பிரதேசத்தில் ஆன்லைன் விளையாட்டு செயலி மூலம் சிறுவர்களை மத மாற்றியதாக கைது செய்யப்பட்ட ஷாநவாஸ்கானுக்கு பாகிஸ்தானில் இருப்பவர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் ஆன்லைன் விளையாட்டு செயலி மூலம் சிறுவர்களை குறிவைத்து மத மாற்ற மோசடி நடப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மேற்படி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து விசாரித்த போலீஸார் காஜியாபாத்தில் சஞ்சய் நகர் என்கிற பகுதியில் செயல்பட்டுவரும் மசூதியின் மவுலவி அப்துல் ரகுமான் என்பவரை கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் சிறுவர்களை குறிவைத்து ஒரு கும்பல் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, மேற்படி முறைகேட்டுக்கு மூளையாக செயல்பட்ட மஹாராஷ்டிர மாநிலம் தானேயைச் சேர்ந்த ஷாநவாஸ் கானை போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர். இவரிடமிருந்து 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. இந்த செல்போன்களை ஆராய்ந்ததில் பாகிஸ்தானில் வசிக்கும் 30 பேரின் சிம்கார்டு நம்பர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, ஆன்லைன் விளையாட்டு மூலம் சிறுவர்களை மத மாற்றிய விவகாரத்தில் பாகிஸ்தானில் இருப்பவவர்களுடன் ஷாநவாஸ்கான் தொடர்பில் இருந்தது தெரியவந்திருக்கிறது.


Share it if you like it