11 வயது சிறுமி… பாதிரியார் செய்த பாதகம்!

11 வயது சிறுமி… பாதிரியார் செய்த பாதகம்!

Share it if you like it

11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கிறிஸ்தவ பாதிரியார் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் நகரின் சண்டிநகர் பகுதியில் இருக்கிறது அந்த சர்ச். இங்கு தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்த 67 வயதான ஆல்பர்ட் பாதிரியாராக இருந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் சைக்கிள் ஓட்டுவதற்காக வெள்ளிக்கிழமை மாலை அந்த சர்ச்சுக்கு சென்றிருக்கிறார். அப்போது பாதிரியார் ஆல்பர்ட், அச்சிறுமியிடம் பணம் தருவதாகக் கூறி தனது அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அறைக்குள் சென்றதும் கதவை தாழ்பாள் போட்ட பாதிரியார் ஆல்பர்ட், சிறுமியிடம் ஆபாசப் படங்களைக் காட்டி, அவளது ஆடைகளை அவிழ்த்திருக்கிறார்.

திமிறிய சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். பின்னர், இதை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று அச்சிறுமை மிரட்டி இருக்கிறார். ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமியோ இந்த விஷயத்தை மறுநாள் பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து, சிறுமியின் தாயார் லோக்கல் போலீஸில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து, பாதிரியார் ஆல்பர்ட் மீது குழந்தைகள் பாலியல் குற்றங்கள் தடுப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், பாதிரியார் ஆல்பர்ட்டை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. நீரஜ் ஜாடூன் கூறுகையில், புகாரின் அடிப்படையில் ஆல்பர்ட் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்ட இருவரின் டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. குற்றம் நிரூபணமானால் இந்த வழக்கில் பாதிரியார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பயகரோபேட்டாவில் கடந்த 4 ஆண்டுகளில் 17 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக 42 வயது பாதிரியார் மீது கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பாதிரியார் பெண்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். இந்த பெண்களில் ஒருவர் தேவாலயத்தில் இருந்து தப்பி வந்து போலீஸில் புகார் அளித்தார். இதன் பிறகே, இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதேபோல, கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணலங்காவைச் சேர்ந்த பாஸ்டர் அம்பதி அனில் குமார் என்கிற பிரேமா தாஸ் என்ற போதகரும் பாலியல் புகாரில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே, உலகம் முழுவதுமே கிறிஸ்தவ பாதிரியார்கள் பாலியல் புகாரில் சிக்குவது வாடிக்கையாக இருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் இது அதிகளவில் அரங்கேறி வருகிறது. இதிலும், கேரள பாதிரியார்கள்தான் ஏராளமான பாலியல் புகாரில் சிக்கி வருகிறார்கள்.


Share it if you like it