சிறுமி கூட்டு பலாத்காரம்… 2 கி.மீ. நிர்வாணமாக ஓட்டம்: நவ்ஷே அலி கைது, இம்ரான் உட்பட 4 பேருக்கு வலை!

சிறுமி கூட்டு பலாத்காரம்… 2 கி.மீ. நிர்வாணமாக ஓட்டம்: நவ்ஷே அலி கைது, இம்ரான் உட்பட 4 பேருக்கு வலை!

Share it if you like it

உத்தரப் பிரதேசத்தில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட, நிர்வாணமாக ஓடவிடப்பட்ட சம்பவம் தொடர்பாக நவ்ஷே அலி என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இம்ரான் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் போஜ்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது தாகுர்த்வாரா கிராமம். இவ்வூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, பக்கத்து ஊரில் நடந்த கண்காட்சியை பார்வையிட தனது நண்பருடன் கடந்த 1-ம் தேதி சென்றுவிட்டு, இரவு 8 மணியளவில் வீடு திரும்பி இருக்கிறார். அப்போது, 2 பைக்குகளில் வந்த நவ்ஷே அலி, இம்ரான் உட்பட 5 பேர் கொண்ட கும்பல், அச்சிறுமியைக் கடத்திக் கொண்டு சைத்பூர் காதர் ஏரியாவிலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றது. அங்கு வைத்து அச்சிறுமியை 5 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கும்பல், அச்சிறுமியின் ஆடைகளை பிடுங்கிக் கொண்டு, நிர்வாணமாக நடந்து செல்லுமாறு மிரட்டிவிட்டு எஸ்கேப்பாகி இருக்கிறார்கள்.

இதையடுத்து, அச்சிறுமி சுமார் 2 கி.மீ. தூரம் நிர்வாணமாக நடந்தபடியே வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். சிலர் அப்பெண்ணின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். ஆனால், வீட்டுக்கு வந்த சிறுமி, நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறவில்லை. கடந்த 7-ம் தேதி தனது சகோதரியிடம் மட்டும் கூறியிருக்கிறார். உடனே, அவர் தனது மாமாவிடம் கூறவே, அவர் போஜ்பூர் போலீஸில் புகார் செய்திருக்கிறார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தாலும், யாரையும் கைது செய்யவில்லை. இதனிடையே, சிறுமி நிர்வாணமாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகவே, போலீஸார் உஷாராகி துரித நடவடிக்கையில் இறங்கினர்.

விசாரணையில், நவ்ஷே இலி, இம்ரான் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல்தான் சிறுமியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, நிர்வாணமாக நடக்க விட்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து, நவ்ஷே அலியை மட்டும் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். மற்ற 4 பேரும் தலைமறைவாகி விட்ட நிலையில், அவர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டிருக்கிறார்கள். உ.பி.யில் கடந்த வாரம்தான் 15 மற்றும் 17 வயதுடைய பட்டியலின சகோதரிகளை 6 பேர் கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல் கடத்திச் சென்று கரும்புத் தோட்டத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து மரத்தில் தொங்கவிட்ட சம்பவம் அரங்கேறியது. கடந்த சில தினங்களுக்கு 18 வயதுடைய மற்றொரு சிறுமியை 2 இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தனர். இந்த நிலையில், இம்மாதத்தில் மூன்றாவதாக இச்சம்பவம் அரங்கேறி இருப்பது உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it