2-ம் வகுப்பு மாணவியிடம் அடங்க மறுத்து அத்துமீறிய  வி.சி.க. நிர்வாகி!

2-ம் வகுப்பு மாணவியிடம் அடங்க மறுத்து அத்துமீறிய வி.சி.க. நிர்வாகி!

Share it if you like it

விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகி இரண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்த பின்பு, பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவிகள் தொடர்பாக வரும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், கோவை மாணவி பொன்தாரணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 5-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம். மேலும், கோவையில் காணாமல் போன சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது. அதே போல, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி லாவண்யா, தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைகேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள், கொடுத்த டார்ச்சர் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம். இப்படியாக, பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றசம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது.

அந்த வகையில், தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை பகுதியைச் சேர்ந்த, கூலித்தொழிலாளியின் மகள் கனிஷ்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர், குணராமநல்லூர் அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி பள்ளி படிப்பை முடித்து விட்டு, வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்பொழுது, அதே பகுதியை, சேர்ந்த வீராசாமி (47) விடுதலை சிறுத்தை கட்சியின் கிளை நிர்வாகியும் குணராமநல்லூர் பஞ்சாயத்தின் 15-வது வார்டு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர்தான், தனிமையில் வந்து கொண்டு இருந்த கனிஷ்காவிற்கு, திண்பண்டம் வாங்கி தருவதாக கூறி கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து, உனது பெற்றோரிடம் தெரிவித்தால், அவர்களை கொன்றுவிடுவேன் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

அதன்பின் பெற்றோர்கள் மாணவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்பொழுது, கனிஷ்காவை பரிசோதனை செய்த மருத்துவர் ஸ்கேன் எடுத்து வருமாறு வலியுறுத்தியுள்ளார். அப்போது, ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர் உங்கள் குழந்தை பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளது என பகீர் தகவலை தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து, உடனடியாக குழந்தையிடம் கேட்ட போது தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி மாணவி கதறி அழுதபடி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, மாணவியின் பெற்றோர்கள் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, வீராசாமியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் என்றால் உடனே கருத்து கூறும் வி.சி.க தலைவர், தனது கட்சியை சேர்ந்த நிர்வாகி செய்த இழிவான செயலுக்கு எப்பொழுது கண்டனம் தெரிவிப்பார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it