உயர்த்திவிட்டவரை மறந்த வடிவேலு, வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

உயர்த்திவிட்டவரை மறந்த வடிவேலு, வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

Share it if you like it

உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 71. மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல், தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின் இட நெருக்கடி காரணமாக ராஜாஜி அரங்கிற்கு மாற்றப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் சென்னை தீவுத்திடலுக்கு உடல் மாற்றப்பட்டது. தீவுத்திடலில் கட்சித்தொண்டர்கள், ரசிகர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கேப்டன் அவர்கள் இருந்தபோது நடிகர் வடிவேலு திமுகவுடன் சேர்த்துக்கொண்டு அரசியல் மேடைகளில் விஜயகாந்த் அவர்களை மிக மட்டமாக தரக்குறைவாக பேசியிருப்பார். அதனை திமுகவினர் ரசித்து சிரித்து பார்த்து கொண்டிருக்கும் காணொளியானது சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இவ்வளவு அவமானப்படுத்தியும் இழிவுபடுத்தியும் ஒருநாள் கூட விஜயகாந்த் அவர்கள் வடிவேலுவை பற்றி தவறாக பேசியதே கிடையாது என்றும் தற்போது அவர் ஏன் படங்களில் நடிப்பதில்லை, அவர் பிறவி கலைஞன் அவர் நடிக்க வேண்டும் என்றும் தான் கூறியுள்ளதாக கேப்டன் மனைவி பிரேமலதா ஒரு காணொளியில் கூறியுள்ளார்.

என்னதான் எதிரியாக இருந்தாலும் மரணம் என்று நேரும்போது பகைவனாக இருந்தாலும் அவருடைய துக்க நிகழ்ச்சியில் பங்கு கொள்வதே தமிழர்களின் பழக்கம். அப்படி இருக்கையில் வடிவேலு விஜயகாந்த் அவர்களின் இரப்பிற்கு அஞ்சலி செலுத்த வராததால் பலரும் அவரை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.


Share it if you like it