சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் புதிதாக அமைக்கப்பட்ட வள்ளலார் திருவுருவ சிலையை ஆளுநர் ரவி இன்று திறந்து வைத்தார். வீடியோ கான்பரன்ஸ் வழியாக பிரதமர் மோடி கலந்துக்கொண்டு பேசினார். இதையடுத்து கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், என்னை விமர்சிப்பவர்களை நான் ஒதுக்கமாட்டேன். ஏனெனில் நான் ஒரு சனாதனவாதி. சமூகத்தில் உள்ள வேற்றுமைகளை சனாதனம் என கூறும் நபர்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை.வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறியது சனாதனத்தின் வெளிப்பாடு என்று ஆளுநர் ரவி பேசினார்.