வி.சி.க. நிர்வாகி விக்ரமன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் திருமாவளவனிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பவர் விக்ரமன். இவர், மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உண்டு. அதனை மெய்ப்பிக்கும் வகையில், இவரது செயல்பாடுகள் இருந்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு வாலிபர் ஒருவருக்கு விக்ரமன் பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இப்படிப்பட்ட சூழலில், விக்ரமன் மீது அவரது காதலியான கிருபா முனுசாமி பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். இந்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.