எதுக்கு இந்த கட்ட பஞ்சாயத்து பிரபல திரைப்பட இயக்குனர் காட்டமான கேள்வி?

எதுக்கு இந்த கட்ட பஞ்சாயத்து பிரபல திரைப்பட இயக்குனர் காட்டமான கேள்வி?

Share it if you like it

திருவள்ளுர் குறித்து விசிக தலைவர் தெரிவித்த கருத்து மக்கள் மத்தியில் கடும் கோவத்தை உருவாக்கியுள்ளது.

வி.சி.க தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சமீபத்தில் பேசிய காணொளி மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், ஆத்திரத்தையும், ஏற்படுத்தியுள்ளது.. ஞானஸ்தானம் பெற்று தான் திருக்குறளை திருவள்ளுவர் எழுதியுள்ளார் எனவும், ஈசன் தான் ஏசு பிரான் என்று வாய்க்கு வந்த படி உளறி கொட்டி உள்ளார்.

விடியல் ஆட்சியில் நிகழும் அட்டூழியங்களையும், அடாவடிகையும், கண்டிக்காமல் அது குறித்து எல்லாம் வாய் திறக்காமல், தொடர்ந்து கள்ள மெளனமாக இருந்து விட்டு, திருவள்ளுவரை மதம் மாற்ற முயற்சி மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குறியது என்று நெட்டிசன்கள் திருமாவிற்கு பாடம் நடத்தி வரும் இவ்வேளையில், பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு அவர்கள் திருமாவின் அபத்தமான பேச்சுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it