தடா பெரியசாமி வீட்டின் மீது தாக்குதல்…வி.சி.க.வினர் காரணமா?

தடா பெரியசாமி வீட்டின் மீது தாக்குதல்…வி.சி.க.வினர் காரணமா?

Share it if you like it

பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் எஸ்.சி. அணி தலைவருமான தடா பெரியசாமி வீடு மற்றும் கார் மீது நேற்றிரவு மர்ம நபர்கள் திடீரென தாக்குல் நடத்தியுள்ளனர். இதற்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார் ;

நேற்று இரவு பா.ஜ.க. SC அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமி அவர்கள் வீட்டின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தி, அவரது வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். சமூக விரோதிகளின் இந்தச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

தடா பெரியசாமி போன்ற உண்மையான சமூக நீதிக்கு உழைக்கும் பா.ஜ.க. தலைவர்களின் செயல்பாடுகள், போலி சமூக நீதி பேசிக் கொண்டிருப்பவர்களை எந்த அளவுக்கு அச்சுறுத்தியிருக்கிறது என்பது இது போன்ற நிகழ்வுகளில் இருந்து தெரிகிறது.

இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. ஏழை எளிய மக்களுக்கான எங்கள் பணிகளை, இது போன்ற கோழைத்தனமான செயல்களால் தடுக்க முடியாது என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவிதுள்ளார்.

இதனிடையே, திருமாவளவன் பெரிய ஏஜென்ட், வெளிநாட்டு கைக்கூலி கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்திற்கும் வக்காலத்து வாங்கும் வேலை செய்பவர். அம்பேத்கருக்கு, திருமாவளவன் துரோகம் செய்கிறார். அவரது, பெயரை சொல்லி ஊரை ஏமாற்றி வருகிறார். அவர், ஒரு பிழைப்புவாதி என மிக கடுமையாக திருமாவளவனையும், ஆ. ராசாவையும் தடா பெரியசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it