நடிகர்கள் அரசியலுக்கு வரும் சாபக்கேடு தமிழ்நாட்டில் உள்ளது: உதயநிதியை சீண்டினாரா திருமா?

நடிகர்கள் அரசியலுக்கு வரும் சாபக்கேடு தமிழ்நாட்டில் உள்ளது: உதயநிதியை சீண்டினாரா திருமா?

Share it if you like it

நடிகர்கள் அரசியலுக்கு வரும் சாபக்கேடு தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவரது, கட்சி தி.மு.க. உடன் கூட்டணியில் உள்ளது. இவரது, பேட்டிகள் சில நேரங்களில் ஆளும் கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, திருமாவளவன் அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறார். அந்த பேட்டியில், நடிகர்கள் அரசியலுக்கு வரும் சாபக்கேடு தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது என வேதனையுடன் குறிப்பிட்டு இருக்கிறார். நடிகர் விஜய்யை விமர்சனம் செய்வது போல அமைச்சர் உதயநிதியை சீண்டி இருக்கிறாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it