வெள்ளம் பாதித்த பகுதிகளில் நாகர்கோவில் எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தி கள ஆய்வு.
தமிழக பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரும் வாழும் காமராஜர் என மக்களால் அன்புடன் அழைக்கப்படும், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி அவர்கள் மழை வெள்ளத்தில் பாதித்த தனது தொகுதிக்கு உட்பட்ட, மக்களை நேரில் சந்தித்து தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
தனது வயதை கூட பொருட்படுத்தாமல், களத்தில் இறங்கி மக்களுக்கு சிறப்பான பணியினை செய்து வரும் பா.ஜ.க எம்.எல்.ஏ-வை பார்த்தாவது தோழர் அருணன், வீரமணி, வைகோ, போன்றவர்கள் சென்னை மழை வெள்ளத்தில் தவித்து வரும் மக்களுக்கு உதவ முன்வருவார்களா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.