உனக்கு 1,000… ங்கொம்மாளுக்கு 1,000: அமைச்சரின் ‘சில்லரை’ பேச்சு!

உனக்கு 1,000… ங்கொம்மாளுக்கு 1,000: அமைச்சரின் ‘சில்லரை’ பேச்சு!

Share it if you like it

உனக்கு 1,000 ரூபாய், ங்கொம்மாளுக்கு 1,000 ரூபாய் தரும் ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான் என்று அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பொன்னை ஆற்றின் குறுக்கே 40 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படவிருக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி நூல்துறை அமைச்சர் காந்தி, அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன், மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அமைச்சரும், தி.மு.க. பொதுச் செயலாளருமான துரைமுருகன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசியபோது, “பொன்னை ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த தரைப்பாலம் சேதமடைந்ததால் புதிதாக உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது.

விரைவில் காட்பாடி ரயில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களுக்காக இவ்வளவு செய்தும் நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. இருந்தாலும் நான் உங்களுக்கு என் கடமைகளை செய்து வருகிறேன். தற்போது கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்கு 1,000 ரூபாய் வழங்கி வருகிறோம். அதேமாதிரி எங்களுக்கு தர்றதா சொன்ன 1,000 ரூபாய் எங்கேன்னு கேட்குறீங்களா? இப்பத்தான் சில்லரை மாத்திக் கொண்டிருக்கிறோம். விரைவில் 1,000 ரூபாய் வழங்குவோம். உனக்கு 1,000 ரூபாய், ங்கொம்மாளுக்கு 1,000 ரூபாய் வழங்கும் ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான்” என்றார்.

துரைமுருகனின் இந்த பேச்சுதான் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எங்களது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு, கான்ட்ராக்ட் உள்ளிட்டவற்றில் கமிஷனும் வாங்கிக் கொள்வதோடு, எங்கள் பணத்தை எங்களுக்குத் திருப்பித் தருவதை இவ்வளவு கேவலமாக விமர்சிக்கிறாரே என்று கொந்தளிக்கிறார்கள். ஏற்கெனவே, இப்படித்தான் பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிப்பதை ஓசில தானே வருகிறீர்கள் என்று அமைச்சர் பொன்முடி பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it