தீ பிடித்த திரையரங்கம்: பதறி ஓடிய ரசிகர்கள்!

தீ பிடித்த திரையரங்கம்: பதறி ஓடிய ரசிகர்கள்!

Share it if you like it

விக்ரம் படம் ஓடிக் கொண்டு இருந்த திரையரங்கம் திடீர் என தீ பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இப்படத்தில், முன்னனி நடிகர்கள் பலர் நடித்து உள்ளனர். இதன்காரணமாக, பொதுமக்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்தவகையில், இப்படத்தினை பார்க்க பொதுமக்கள் ஆர்வமுடன் திரையரங்கை நோக்கி படைத்து எடுத்து வருகின்றனர். இந்நிலையில், புதுவை மாநிலம் காலாபட் பகுதியில் உள்ள ஜெயா திரையரங்கில் நேற்றைய (செவ்வாய்) தினம் இரவு காட்சி வெளியிடப்பட்டது. அந்தவகையில், படத்தின் இறுதி கட்டமாக நடிகர் சூர்யா நடித்த காட்சியை ரசிகர்கள் பார்த்த வந்த வேளையில் திரையின் ஒரு பக்கம் திடீர் என தீ பிடித்துள்ளது. இதையடுத்து, என்ன செய்வது என்று தெரியாமல் பெண்கள், குழந்தைகள் என பலர் உயிரை காப்பாற்றிக் கொள்ளும் விதமாக அலறி அடித்துக் கொண்டு திரையரங்கை விட்டே ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it