சமீபத்தில் பாஜகவை சேர்ந்த நிஷிகாந்த் துபே சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த புகார் கடிதத்தில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விகளில் பெரும்பாலானவை அதானி தொடர்பான கேள்விகளைதான் எழுப்பியுள்ளார். இதற்காக அவர் மற்ற நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் வாங்கியுள்ளதாகவும், அதற்குரிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இப்புகாரை குறித்து, அக்டோபர் 26 ஆம் தேதி ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் 31 ஆம் தேதி நேரில் ஆஜராக லோக்சபா நெறிக்குழு சம்மன் அனுப்பிய நிலையில், நவம்பர் 4 ஆம் தேதி வரை தனக்கு பணிகள் இருப்பதாகவும்,தன்னால் வர முடியாதென்றும் கடிதம் அனுப்பியுள்ளார்.