தலைக்கவசம் அணிவது குறித்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய தருமபுரி போக்குவரத்து காவல்துறை. தருமபுரியில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பட்டாசு பாக்ஸ் பரிசாக வழங்கப்பட்டது. தருமபுரி நகர் பகுதியில் போக்குவரத்துக்கு காவலர்களுடன் மை தருமபுரி தன்னார்வ அமைப்பினர் இணைந்து, போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு பட்டாசு பாக்ஸை பரிசாக வழங்கினர்.