மேற்குவங்கத்தில் காங்கிரஸ், திரிணாமுல் மோதல்: வன்முறையில் குண்டுவீச்சு… பலி 1… பதட்டம், பரபரப்பு!

மேற்குவங்கத்தில் காங்கிரஸ், திரிணாமுல் மோதல்: வன்முறையில் குண்டுவீச்சு… பலி 1… பதட்டம், பரபரப்பு!

Share it if you like it

மேற்குவங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறையின்போது நடந்த குண்டு வீச்சில் ஒருவர் பலியானார். இதனால், அங்கு பெரும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டிருக்கிறது.

மேற்குவங்க மாநிலத்தில் ஜூலை 8-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, வேட்புமனு தாக்கல் தொடங்கியதில் இருந்து, கடந்த 2 வாரங்களாக நடந்த வன்முறைகளில் இதுவரை 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பலரும் காயமடைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பெல்டங்கா பகுதியில் நடந்து வன்முறையின்போது கபாஷ்டங்கா கிராமத்திலுள்ள மாந்தோப்பில் குண்டு வீசப்பட்டது. இதில், பிரபல தாதா அலிம் ஷேக் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இவர்களில் தாதா அலிம் ஷேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல், முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ராணி நகர் பகுதியில் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது குண்டு வீசப்பட்டதில் 3 பேர் லேசான காயமடைந்திருக்கிறார்கள்.

இத்தாக்குதலுக்கு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம்சாட்டி இருக்கின்றன. தமிழக பா.ஜ.க. தலைவர் நாராயணன் திருப்பதியும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.


Share it if you like it