பா.ஜ.க.விற்கு எதிரான கோஷம்: பதிலடி கொடுத்த பள்ளி சிறுவர்கள்!

பா.ஜ.க.விற்கு எதிரான கோஷம்: பதிலடி கொடுத்த பள்ளி சிறுவர்கள்!

Share it if you like it

பா.ஜ.க.விற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் எழுப்பிய கோஷத்திற்கு பள்ளி சிறுவர், சிறுமியர் பதிலடி கொடுத்த காணொளி வைரலாகி வருகிறது.

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், முதல்வராக மம்தா பேனர்ஜி இருந்து வருகிறார். தமிழகத்தில், சட்டம், ஒழுங்கு எவ்வாறு சந்தி சிரித்து வருகிறதோ அதைவிட பன்மடங்கு மோசமான ஆட்சியை மம்தா நடத்தி வருகிறார் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. இவரது, ஆட்சியில் எழுத்துரிமை மற்றும் பேச்சு உரிமை தொடர்ந்து மறுக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் மீது பல்வேறு வன்முறைகளை ஆளும் கட்சியை சேர்ந்த தொ(கு}ண்டர்கள் நிகழ்த்தி வருகின்றனர். குறிப்பாக, பா.ஜ.க.வினர் மீதான தாக்குதல்களே அதிகம் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஆளும் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பா.ஜ.க.விற்கு எதிராக கோஷம் எழுப்பிய படி சாலையில் ஊர்வலமாக சென்று கொண்டு இருந்தனர். அப்போது, சாலையின் எதிர்புறம் பள்ளி வாகனம் ஒன்று டிராபிக் ஜாமில் சிக்கி நின்றுள்ளது. அந்த வாகனத்தில், இருந்த பள்ளி சிறுவர் சிறுமியர் இந்த காட்சியை கண்டுள்ளனர். இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எழுப்பிய கோஷத்திற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக பா.ஜ.க. வாழ்க என மாணவர்கள் பதில் கோஷம் எழுப்பி இருக்கின்றனர். இச்சம்பவம், தான் இதில் ஹைலட்.

பள்ளி சிறுவர் சிறுமியரின் செயலை கண்ட ஆளும் கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் சிரித்தபடியே அமைதியாக இருங்கள் என விரல் மூலம் சைகை காட்டிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது. இக்காணொளி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it