தர்காக்களை புனரமைக்க தரப்படும் மானியத்தை உயர்த்திய முதல்வர் ஸ்டாலின் கோவில்களுக்கு என்ன செய்தார் ? நெட்டிசன்கள் கேள்வி ?

தர்காக்களை புனரமைக்க தரப்படும் மானியத்தை உயர்த்திய முதல்வர் ஸ்டாலின் கோவில்களுக்கு என்ன செய்தார் ? நெட்டிசன்கள் கேள்வி ?

Share it if you like it

பள்ளிகள் தர்காக்களை புனரமைக்க தரப்படும் மானியத்தை 10 கோடியாக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். மேலும் நீண்டநாள் சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறுபான்மையினர் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அடக்கஸ்தலம் இல்லாத சிறுபான்மையினருக்கு மாவட்ட தலைநகரங்களில் இடம் ஒதுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஹிந்துக்களுக்கு இதுவரை எந்த ஒரு திட்டமும் திமுக அரசு அறிவித்ததில்லை. இதுமட்டுமல்லாமல் ஹிந்துக்களுக்கோ அல்லது ஹிந்து கோவில்களுக்கோ பிரச்சனை என்றாலும் அது சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையோ அல்லது அறிக்கையோ வெளியிட்டு தமிழக மக்கள் பார்த்ததில்லை. சிறுபான்மையினரின் வெறும் வாக்கு வங்கிக்காகக் திட்டங்களை அள்ளிக் கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இவ்வாறு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Share it if you like it