எந்த வழக்காக இருந்தாலும் நீதி நிலைநாட்டப்படும் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உறுதி

எந்த வழக்காக இருந்தாலும் நீதி நிலைநாட்டப்படும் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உறுதி

Share it if you like it

டெல்லியில் உச்சநீதிமன்ற வளாகத்தில் சுதந்திரதின நிகழ்ச்சி நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற நீதிபதி டி. ஒய். சந்திர சூட், தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். எந்த ஒரு வழக்காக இருந்தாலும், அதன் முடிவு எப்படி இருந்தாலும் நீதியை நிலை நாட்டுவதே நீதித்துறையின் அடித்தளம் என அவர் குறிப்பிட்டார். தன்னிச்சையான கைதுகள், வீடுகளை இடிப்பதாக மிரட்டல், சட்ட விரோதமாக சொத்துக்கள் முடக்கம் போன்ற எந்த ஒரு விவகாரமாக இருந்தாலும் மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் அவர்களுடைய குரலாக நீதிமன்றங்களின் உத்தரவு இருக்கும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய்.சந்திர சூட் தெரிவித்தார்.


Share it if you like it