வந்தே பாரத் இரயில் மீது மர்மநபர்கள் கற்கள் வீசியதில், ஜன்னல் கண்ணாடி சேதம் !

வந்தே பாரத் இரயில் மீது மர்மநபர்கள் கற்கள் வீசியதில், ஜன்னல் கண்ணாடி சேதம் !

Share it if you like it

ஒடிசாவின் ரூர்கேலாவில் இருந்து புவனேஸ்வர் நோக்கி வந்தே பாரத் இரயில் சென்று கொண்டிருந்தது. மேராமண்டலி மற்றும் புதாபங்க் நகர் அருகே சென்ற போது மர்ம நபர்கள் சிலர் இரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இரயிலின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கல்வீச்சு சம்பவம் பற்றி உள்ளூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டதாகவும், குற்றவாளிகளை கண்டறியும் பணியில், உள்ளூர் போலீசாருடன் இணைந்து கிழக்கு கடலோர இரயில்வே மண்டல பாதுகாப்பு பிரிவினரும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல, நாட்டின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. எனினும், எந்த ஒரு சம்பவத்திலும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it