பிரதமரே வந்து எங்களிடம் பேசியதில், எங்கள் மன உறுதியை மீட்டெடுத்துள்ளது – முகமது ஷமி !

பிரதமரே வந்து எங்களிடம் பேசியதில், எங்கள் மன உறுதியை மீட்டெடுத்துள்ளது – முகமது ஷமி !

Share it if you like it

சமீபத்தில் ICC உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இந்திய அணி போராடி வெற்றி வாய்ப்பை தவறவிட்டது. இதனால் மைதானமே மயான அமைதியில் ஆழ்ந்தது. மேட்ச் முடிந்த பின்பு இந்திய அணி வீரர்களின் ஓய்வறைக்கு சென்று கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி. சமூக வலைத்தளத்திலும் இதுதொடர்பாக குறிப்பிருந்தார். அதில் நாங்கள் உங்களுடன் இன்றும் எப்போதும் துணை நிற்போம் என்று பதிவிட்டிருந்தார். இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் திரு முகமது ஷமி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தோல்வியை சந்தித்திருக்கும்போது பிரதமர் உங்களை ஊக்கப்படுத்தினால்,அது மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கும். நாட்டின் பொறுப்பை ஏற்றுள்ள ஒருவர் நம்மோடு நின்று நம்மை புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. நமது மனஉறுதி குறையும்போது பிரதமர் ஒருவர் நம்மோடு இருந்து பேசி நம்பிக்கை கொடுத்ததில் எங்கள் மனஉறுதியை மீட்டெடுத்துள்ளது. என்னை பொறுத்தவரை இது மிகப்பெரிய விஷயம். இவ்வாறு பேசியுள்ளார். அந்த காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it