“கவுன்சிலர் சீட்டில் உட்கார நீ யார்” : சட்டையை பிடித்து சண்டை போட்ட திமுக நிர்வாகிகள் !

“கவுன்சிலர் சீட்டில் உட்கார நீ யார்” : சட்டையை பிடித்து சண்டை போட்ட திமுக நிர்வாகிகள் !

Share it if you like it

சென்னை பெருநகர மாநகராட்சி வளசரவாக்கம் 11வது மண்டலத்தில் 153 அது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சாந்தி ராமலிங்கம். போரூரில் உள்ள 153 வது வார்டு மாநகராட்சி டிவிசன் அலுவலகத்தில் கவுன்சிலர் அமரக்கூடிய சீட்டில் (சாந்தி ராமலிங்கம் அமரவேண்டிய இடத்தில்) அவரின் கணவர் ராமலிங்கம் உட்கார்ந்திருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த ராமாபுரம் 154 வது வார்டு திமுக சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, அலுவலகத்தில் புகுந்து “கவுன்சிலர் சீட்டில் உட்கார நீ யார்” என்று ராமலிங்கத்திடம் கேட்டுள்ளார்.

மேலும் கவுன்சிலரின் கணவர் ராமலிங்கத்தை இருக்கையில் இருந்து எழுப்பி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதனால் வெடித்த மோதலில் ரவியும், கவுன்சிலரின் கணவர் ராமலிங்கமும் மாறி மாறி தாக்கி கொண்டனர். திமுக பிரமுகர்களே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it