கோவை மாவட்டம் கண்டபாளையம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் தனபால் என்கிற மாணவரின் வங்கி கணக்கில் தவறுதலாக நேற்று ஒரு லட்ச ரூபாய் தவறுதலாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த அந்த பள்ளி மாணவர் உரியவரிடம் முழு தொகையையும் கொண்டு சேர்த்துள்ளார். இந்த நிகழ்வானது பள்ளி தலைமை ஆசிரியரான ஹேமலதா அவர்களுக்கு தெரிய, உடனே அந்த மாணவனை அழைத்து அனைத்து மாணவ மாணவிகள் முன்னிலும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த சம்பவமானது பள்ளியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அடுத்தவர்களுடைய வங்கி கணக்கிலிருந்தே பணத்தை திருடும் மனிதர்கள் மத்தியில், தன்னுடைய வங்கி கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட பணத்தை வீண் செலவு செய்யாமல் அதை பொறுப்பாக உரியவரிடம் சேர்த்த அந்த பண்பானது வரவேற்கத்தக்கது.