சென்னை வண்ணாராப்பேட்டையை சேர்ந்த ஜோதி என்ற பெண் நெஞ்சுவலி காரணமாக சென்னை ராஜுவ் காந்தி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தநாள அடைப்புக்கான அறிகுறி இருந்ததால் ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. வலது கை மற்றும் கால்களில் நுண்துளை மூலமாக ஆஞ்சியோகிராம் செய்யப்ட்டது. இந்த நிலையில் ரத்த உறைதல் காரணமாக அந்த பெண்ணின் வலது கை மற்றும் கால்கள் கருப்பு நிறத்தில் மாறியது. பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால் அவரை காப்பாற்ற மருத்துவர்கள் வலது கையை அகற்றினர். மேலும் காலை காப்பற்றும் நடவடிகையிலும் ஈடுப்பட்டனர். இந்த நிலையில் தவறான சிகிச்சை காரணமாகவே தனது மனையின் வலது கை அகற்றப்பட்டது என்று கணவர் குற்றம்சாட்டியுள்ளார். தனியார் மருத்துவமனையில் அதிக பணம் செலவாகும் என கூறிய தால் அரசு மருத்துவ மனையை நாடியதாகவும் அவர் தெரிவித் துள்ளார்.