பொய் சொல்லி மாட்டிக்கொண்ட திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னா அரசியலைவிட்டு விலகுவாரா ?

பொய் சொல்லி மாட்டிக்கொண்ட திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னா அரசியலைவிட்டு விலகுவாரா ?

Share it if you like it

சமீபத்தில் சமூக ஊடகத்தில் நடந்த விவாத நிகழ்ச்சியில் தமிழன் பிரசன்னா மற்றும் பாஜகவை சேர்ந்த கருப்பு முருகானந்தம் கம்யூனிச பிரமுகர் அருணன் ஆகியோர் பங்கேற்றனர். அதில் பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம் தமிழன் பிரசன்னாவுக்கு எதிராக ஒரு கேள்வி எழுப்பினார். அதில் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று தமிழன் பிரசன்னா கூறியதாக கருப்பு முருகானந்தம் கூறினார். அதற்கு தமிழன் பிரசன்னா நான் எப்போது அவ்வாறு கூறினேன் எங்கு கூறினேன் என்று பதில் எழுப்ப நீங்கள் கூறியதை நாளை வெளியிடுகிறேன் என்று பாஜக பிரமுகர் கூறினார். அதற்கு தமிழன் பிரசன்னா உங்களுக்கு திராணி இருந்தால் வெளியிடுங்கள் நான் அவ்வாறு கூறவேயில்லை என்றும் அவ்வாறு வெளியிட்டுவிட்டால் தான் அரசியலை விட்டு விலகி கொள்வதாகவும் சவால் விடுத்தார். இந்நிலையில் பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம் சமூக வலைதளபக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது :-

திறனற்ற அறிவாலயம் சார்ந்த தமிழன் பிரசன்னா அவர்கள் நாகரீகத்தை கற்றுக் கொண்டால் நல்லது. தமிழகத்தின் மதிப்புக்குரிய ஆளுநர் திரு R.N.ரவி அவர்களை மரியாதையின்றி ஒருமையில் பேசுவது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது.நேற்றைய தினம் சொல்லதிகார நிகழ்ச்சி விவாதத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறியது இல்லை என்று மார்தட்டிக்கொண்டார் நான் கூறியவரே வெளியிடுகிறேன் தாங்கள் பதிவிட்ட பொன் வார்த்தைகளை.

03-05-2021 அன்று சமூக வலைதளத்தில் தமிழன் பிரசன்னா அவர்கள் பக்கத்தில் தமிழகத்தில் ஒரு தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் கூட தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ள தங்களது பதிவை இப்போது நீங்கள் நீக்கினாலும் அதற்கான ஸ்கிரீன்ஷாட் ஆதாரம் என்றும் அழியாது.நேரத்திற்கு ஏற்பார் போல் நடந்துகொள்வது பிரச்சனை என்றவுடன் பதிவை நீக்குவது எல்லாம் தங்களின் பழக்கவழக்கம் ஆகும்.

தேர்தல் முன்பு தாங்கள் கூறியதை தமிழகம் முழுவதும் அனைவரும் அறிவர். இவ்வாறு வார்த்தைக்கு வார்த்தை மாற்றி மாற்றி பேசுவது என்பது தங்களின் தவறல்ல அது தாங்கள் உள்ள கட்சியின் கொள்கையாகும் எனவே இயல்பாகவே அது தங்களுக்கும் வந்துவிடும். ஓடுவதோ பின்வாங்குவதோ எங்கள் கொள்கை இல்லை,சில தினங்களுக்கு முன்பு கூட தங்களுடைய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவர்கள் நீதிமன்றத்தில் பொய்யுறைதார், தான் உதயநிதியாக தான் கூறினேன் அமைச்சராக இல்லை என்று அன்றும் இன்றும் மாற்றி மாற்றி பேசினார். இது தங்கள் இயக்கத்தின் வழக்கம் என்று இப்போது நீங்களும் நிரூபித்துள்ளீர்கள். இவ்வாறு பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம் தான் சொன்னதை போல் ஆதாரத்தை வெளியிட்டு விட்டார். இதைபோல் தமிழன் பிரசன்னா தான் சொன்னதை போல் அரசியலை விட்டு விலகுவாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it