திமுக-வுல 35 வருஷமா உழைச்சிருக்கன் : எனக்கு எந்த அங்கீகாரமும் தரல, பாஜகவுல சேர்ந்துட்டன் – திமுக மாவட்ட பிரதிநிதி வெற்றிவேல் !

திமுக-வுல 35 வருஷமா உழைச்சிருக்கன் : எனக்கு எந்த அங்கீகாரமும் தரல, பாஜகவுல சேர்ந்துட்டன் – திமுக மாவட்ட பிரதிநிதி வெற்றிவேல் !

Share it if you like it

கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திமுகவின் நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்.

இன்றைய தினம் கோவையில், தமிழக பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் A.P. முருகானந்தம் முன்னிலையில், திமுக மாவட்ட பிரதிநிதி வெற்றிவேல், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மனோஜ் பிரபாகர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகள்,பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியால் கவரப்பட்டு, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

திமுக மாவட்ட பிரதிநிதி வெற்றிவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

நான் கவுண்டம்பாளையம் திமுக மாவட்ட பிரதிநிதி. நான் கடந்த 35 வருடமாக திமுகவில் இருக்கேன். வட்ட செயலாளராக 10 வருஷம் வேலை செஞ்சிருக்கேன். 10 வருஷத்துல 225 கட்சி நிகழ்ச்சியை நடத்திருக்கேன். தொடர்ந்து மாவட்ட பிரதிநிதியா இருக்கேன். எங்களை மாறி கட்சி காரங்களுக்கு கட்சி தலைமை எந்தவித அங்கீகாரமும் தரல. எங்களை புறக்கணிச்சிட்டு இருக்கு. தமிழக மக்கள் மட்டும் இல்லாமல் திமுக கட்சி தொண்டர்கள் கூட பெரும் மன உளைச்சலில் இருக்காங்க. அதனால என் மண் என் மக்கள் நடைப்பயணத்தின் நாயகன் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தோம். இவ்வாறு அவர் பேசினார். அவர் பேசிய இந்த காணொளியானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

https://x.com/NewsTamilTV24x7/status/1757773352771740080?s=20


Share it if you like it