யோகியை ஜெயிக்க வச்சது ’ஏசு’ – மோகன் சி லாசரஸ் பேச்சு!

யோகியை ஜெயிக்க வச்சது ’ஏசு’ – மோகன் சி லாசரஸ் பேச்சு!

Share it if you like it

உ.பி.யில் யோகி வெற்றி பெற்றதற்கு காரணம் ‘ஏசு’ தான் கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் கூறி இருப்பது தமிழக மக்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. இக்காணொளி தான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

கொரோனா தொற்று தமிழகத்தில் உச்சத்தில் இருந்த சமயத்தில். ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள். தங்களால் இயன்ற உதவிகளை ஏழை, எளியவர்களுக்கு தொடர்ந்து செய்து வந்தன. ஆனால், கிறிஸ்தவ மக்களின் வழிகாட்டி நான் தான் என்று கூறிக்கொள்ளும் மோகன் சி லாசரஸ். அதே, மக்கள் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு இருந்த சமயத்தில். தேவனுக்கு செலுத்த வேண்டிய தசமபாகத்தை சரியாக செலுத்தாவிட்டால், நீ ஒரு திருடன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். இவரின் இந்த கருத்து கிறிஸ்தவ மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், கோவத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

மேலும், மூன்று வருடமாக மண்டியிட்டு ஜெபம் செய்து வருகிறேன். நிச்சயம் பிரதமராக மோடி வரமாட்டார். அப்படி, அவர் மீண்டும் பிரதமர் ஆனால் நான் ஏசுவை வணங்குவதை நிறுத்தி விடுகிறேன் என்று கூறி இருந்தார். ஆனால், அறுதிபெரும்பான்மையுடன் மீண்டும் பிரதமராக மோடி நாட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், உ.பி.யில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் மீண்டும் வெற்றி பெற்று தனது முதல்வர் பதவியை தக்க வைத்து கொண்டார். இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் உ.பி.யில் வெற்றி பெறுவதற்கு காரணம் ‘ஏசு’ தான் என்று மோகன் சி லாசரஸ் கூறியுள்ளார். இது தான் தற்பொழுது மக்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. .

Image

Share it if you like it