பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிட்ட இளம் பெண்ணை காவலர்கள் தேடி வருகின்றனர்.
கோவையை சேர்ந்த இளம்பெண் தமன்னா. இவர், வாயில் பீடியுடனும் கையில் பயங்கர ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் காணொளி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இக்காணொளி, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, கோவை மாவட்ட காவல்துறையினர் தனிப்படை அமைத்து தமன்னாவை தேடி வருகின்றனர்.