அதிக கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்கள்

அதிக கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்கள்

Share it if you like it

கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக கேள்விகளுக்கு வாய்மொழியாக இந்த நாடாளுமன்றக்கூட்டத்தொடரில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்றுடன் முடிந்தது. இதில் கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் வாய்மொழியாக பதில் அளித்துள்ளனர்.

மாநிலங்களவையில் அதிகபட்சமாக 60 சதவீத கேள்விகளுக்கும், மக்களவையில் 37 சதவீத கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இது பாராளுமன்ற கூட்டத்தொடர் வரலாற்றில் ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகின்றது. மேலும் மாநிலங்களவைக்கு இது 250 வது கூட்டத்தொடர் என்பது கூடுதல் சிறப்பாகும்.


Share it if you like it