அதிர்ச்சி சம்பவம் – ராம நவமியன்று வீட்டில் விளக்கு ஏற்றிய ஹிந்து – கொடூரமாக கொலை செய்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் !

அதிர்ச்சி சம்பவம் – ராம நவமியன்று வீட்டில் விளக்கு ஏற்றிய ஹிந்து – கொடூரமாக கொலை செய்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் !

Share it if you like it

  • ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வு நடந்துள்ளது. ராஜஸ்தானின் மத்வா கிராமத்தில் ஹிந்து மதத்தை சேர்ந்த ரேவந்த் சிங் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று குடும்பத்துடன் நமக்காக பாடுபட்டு கொண்டிருக்கும் மருத்துவர்களை பாராட்டும் வகையில் கைதட்டினார். மேலும் அதன்பிறகு விளக்கு ஏற்றினார். ஆனால் இவை அனைத்தும் அவர் வீட்டின் அருகே வசிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு பிடிக்கவில்லை. அதனால் அதனால் அவர் மீது தொடர்ந்து வெறுப்பை காட்டி வந்தனர். இந்நிலையில் ராம நவமி நாளில் உலகெங்கிலும் உள்ள பல இந்துக்களைப் போலவே, ரேவந்த் சிங்கும் ஒரு விளக்கை ஏற்றி தனது வீட்டிற்கு வெளியே வைத்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அவர் மீது கொடூரமாக தாக்கினர். பின் அவரை கிராம மக்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
  • ரேவந்த் சிங்கின் மரணம் அவரது முழு குடும்பத்தையும் மிக மோசமாக பாதித்திருக்கிறது. அவரது மனைவியும் மற்றும் சகோதரரும் மனநிலை சரியில்லாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது மனைவி மற்றும் சகோதரர், தனது நான்கு குழந்தைகள் ஆகியவர்களை ரேவந்த் சிங்கின் வருமானம் மட்டும் தான் வழிநடத்தி கொண்டிருந்தது. ஆனால் அவரும் தற்போது இல்லாத நிலையில் அந்த குடும்பத்தின் நிலை சொல்ல முடியாத துயரத்தில் அவரது குடும்பம் மூழ்கியுள்ளது.
blank
ரேவந்த் சிங்கின் நான்கு குழந்தைகள்
  • மேலும் பன்தானா காவல் நிலையத்தில் தில்தார் கான், ஃபெரோஸ் கான் மற்றும் இக்பால் மீது ரேவந்த் சிங்கின் மருமகன் மீது தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ரேஷன் கடையில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது சிங் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
  • குற்றம் சாட்டப்பட்டவர் மீது விரைவில் கொலை வழக்கு பதிவு செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திடம் மஹந்த் பிரதாப்புரி வேண்டுகோள் விடுத்துள்ளார். விசாரணைக்கு பின்னர் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று எஸ்.பி கிரண் ஜங் தெரிவித்தார்.

Share it if you like it