அந்தர் பல்டி அடித்த சுப.வீரபாண்டியன்..! அதிர்ச்சி அடைந்த கறுப்பர் கூட்டம்…!

அந்தர் பல்டி அடித்த சுப.வீரபாண்டியன்..! அதிர்ச்சி அடைந்த கறுப்பர் கூட்டம்…!

Share it if you like it

திமுகவின் கறுப்பர் கூட்டம் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியது. உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு திரை நட்சத்திரங்கள் தங்களின் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும், கறுப்பர் கூட்டத்திற்கு தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

கறுப்பர் கூட்டத்தின் பின்னணியில் நான் உள்ளதாகவும். கறுப்பர் கூட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நான் பெரியார் விருது கொடுத்ததாகவும் மாரிதாஸ் பொய்யான தகவலை கூறியுள்ளார். இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக இரவு, பகலாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

பேசிய அனைவருமே ஆபாசமான வார்த்தைகளால் என்னை கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டினர். என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் காவல்துறையில் மாரிதாஸ் மீது புகார் தெரிவிக்க வந்துள்ளேன் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுப. வீரபாண்டியன் கூறியிருப்பது. கருப்பர் கூட்டம் வலைத்தளம் நடத்தி வரும் தோழர்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it