அன்று பெண்களை அசிங்கமாக பேசியது திருமா தானே..! இன்றென்ன யோக்கியன் போல் பேச்சு – காயத்ரி ரகுராம் பளார்!

அன்று பெண்களை அசிங்கமாக பேசியது திருமா தானே..! இன்றென்ன யோக்கியன் போல் பேச்சு – காயத்ரி ரகுராம் பளார்!

Share it if you like it

அண்மையில் நீயூஸ் 7 ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பாஜக பொறுப்பாளர் திரு. நாகராஜன் மற்றும் ஜோதி மணி கலந்து கொண்டனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் கடுமையான வாக்கு வாதம் நிகழ்ந்தது. ஜோதிமணி பாரதப் பிரதமரை கல்லால் அடிக்க வேண்டும் என்று கூறினார். பதிலுக்கு நாகராஜனும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நாகராஜனுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை டி.வி விவாதத்தில் பாஜக பொறுப்பாளர் அவமதித்ததை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. மகளிருக்கு எதிரான பாஜகவின் அடிப்படை வாதமே அவருக்கு இத்தகைய துணிச்சலைத் தருகிறது. இது சனாதனத்தின் விளைச்சல் என்று கூறியுள்ளார்.

இதற்கு தமிழகம் முழுவதும் நன்கு அறிந்தவரும் பாஜக தீவிர ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் திருமாவளவனுக்கு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

சனாதனி தர்மத்தில் பல பெண்கள் இருந்தனர்- கண்ணகி, வேலு நாச்சியார், ஜான்சி ராணி, கிட்டூர் சென்னாமா, காயத்ரி தேவி, பூரதம் திருனல் சேது லட்சுமி பாய், டாக்டர் ஜெ.ஜயலலிதா. மற்ற மதங்கள் இன்னும் பெண்களை அடக்குகின்றன. மனிதன் மட்டுமே அதைப் புரிந்துகொள்கிறான். நீங்கள் பெண்களை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

https://twitter.com/gayathriraguram/status/1262611212862238721


Share it if you like it