ஆம் ஆத்மீ கட்சி எம்எல்ஏ -வின் மிரட்டல்களுக்கு பயந்து மருத்துவர் தற்கொலை !

ஆம் ஆத்மீ கட்சி எம்எல்ஏ -வின் மிரட்டல்களுக்கு பயந்து மருத்துவர் தற்கொலை !

Share it if you like it

  • தென் டெல்லியின் தியோலி பகுதியில் வசிக்கும் 50 வயதான மருத்துவர் நேற்று ராஜேந்திர சிங் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இவர் டெல்லியில் உள்ள துர்கா விஹாரில் தனது கிளினிக்கை நடத்தி வந்தார். பல ஆண்டுகளாக, ராஜேந்திர சிங் தண்ணீர் டேங்கர்களை டெல்லி ஜல் வாரியத்திற்கு குத்தகைக்கு எடுத்திருந்தார். இதனையடுத்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பிரகாஷ் ஜார்வல் மற்றும் அவரது உதவியாளரின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு அவர் ஆளானதாகக் கூறப்படுகிறது.
  • ஆம் ஆத்மி எம்.எல்.ஏ, டேங்கர்களுக்கு மிகப்பெரிய தொகையை செலுத்துமாறும், இல்லையென்றால் அரசு உங்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடும் என்று மிரட்டியுள்ளனர். அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காததால் இவரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
  • குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜார்வல் சில லட்சம் ரூபாயில் நிலுவையில் இருந்த ராஜேந்திர சிங்கிற்கு சேர வேண்டிய தொகையை நிறுத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக விரக்தியடைந்த மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
  • டெல்லி போலீசார் தற்கொலை செய்துகொண்ட மருத்துவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையினர் தற்கொலைக் குறிப்பைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  • ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ பிரகாஷ் ஜார்வல் டெல்லி ஜால் போர்டு பொறியாளரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஜார்வால் முன்னர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share it if you like it