ஆர்.கே நகர் காவல் நிலையத்தில்  தி.மு.க மனோகரன் மீது பெண் பகீர் புகார்…!

ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் தி.மு.க மனோகரன் மீது பெண் பகீர் புகார்…!

Share it if you like it

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரைச் சேர்ந்த  மாணவரணி நிர்வாகி சங்கர். காரைக்குடியில் பெண்கள் ஹாக்கி கிளப் நடத்தி வருகிறார். தனியார் பள்ளியில் பயின்று வரும் (15) வயது மாணவி மற்றும் அவரது சகோதரி (14) இருவரும் பயிற்சி பெற்று வந்தனர். இவ்விருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு சங்கர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

திமுக மாணவரணி நிர்வாகி சங்கர்

இந்நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் சென்னை தண்டையார்பேட்டையில் அரங்கேறியுள்ளது. திமுகவின் முன்னாள் மாவட்ட துணைசெயலாளர். திரு மனோகரன் என்பவர் துரித உணவகம் நடத்தி வருகிறார். அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு செல்போனில் ஆபாச படங்களை அனுப்பியும். பாலியல் தொல்லையும்  கொடுத்துள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் அடிப்படையில் திமுகவை சேர்ந்த மனோகரன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் அவனை கைது செய்துள்ளனர்.


Share it if you like it