வீணா விஜயன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு !

வீணா விஜயன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு !

Share it if you like it

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மற்றும் அவரது ஐடி நிறுவனம் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கனிமவள நிறுவனம் ஒன்று வீனா விஜயனின் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக பணம் செலுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.

தீவிர மோசடி விசாரணை அலுவலகத்தின் புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த வழக்கை பதிவு செய்துள்ளதாகவும், இந்த விவகாரத்தை விசாரிக்க மத்திய அரசு கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பினராயி விஜயனின் மகள் வீனா விஜயன் எக்ஸாலஜிக் (Exalogic) என்ற மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், கொச்சியை சேர்ந்த தனியார் சுரங்க தொழில் நிறுவனமான சிஎம்ஆர்எல், வீனா விஜயனின் மென்பொருள் நிறுவனத்திடம் எந்த விதமான சேவையையும் பெறாமல் ஏறத்தாழ 1 கோடியே 72 லட்ச ரூபாய் பணம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த ஜனவரி மாதம் கேரள சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், தனது மனைவியின் ஓய்வூதிய நிதியைப் பயன்படுத்தி தனது மகள் நிறுவனம் தொடங்கியுள்ளார் என்றும், தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *