இந்தியாவின் உதவியை நாடும் ஈரான்

இந்தியாவின் உதவியை நாடும் ஈரான்

Share it if you like it

வளைகுடாப் பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிப்பதில் இந்தியா முக்கிய பங்காற்ற முடியும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஜரிப் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அமெரிக்காவால் கொல்லப்பட்ட ராணுவ தளபதி காசிம் சுலைமானிக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு நாடுகளில் இருந்து ஒரு கோடி மக்கள் திரண்டதாக தெரிவித்தார்.

அவரை கொன்றது தவறு என்பதை அமெரிக்கா உணர வேண்டியது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். இதனிடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் பேச்சுவார்த்தை நடத்தினார்


Share it if you like it