இந்தியாவின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த  2024 தேர்தலை புறக்கணித்து மோடியை மீண்டும் பிரதமராக அறிவியுங்கள் – ரங்கோலி சாண்டல் !

இந்தியாவின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த 2024 தேர்தலை புறக்கணித்து மோடியை மீண்டும் பிரதமராக அறிவியுங்கள் – ரங்கோலி சாண்டல் !

Share it if you like it

  • பாலிவுட் சூப்பர் ஸ்டார் கங்கனா ரனாவுத்தின் சகோதரி, ரங்கோலி சாண்டல், ஒரு டுவீட் செய்துள்ளார். அதில், வுஹான் கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தொடர்ந்து மற்ற முயற்சிகளில் அதிக பலனைச் செலவழிக்கக்கூடிய வளங்களை சேமிக்க ஒரு புதுமையான யோசனையை கூறியுள்ளார். 2024 பொதுத் தேர்தல்களை தள்ளுபடி செய்து, நரேந்திர மோடியை தொடர்ந்து பிரதமராக நாட்டுக்கு சேவை செய்ய அனுமதிப்பதன் மூலம் தேர்தல்களை நடத்துவதற்கு செலவிடப்படும் பல லட்சம் கோடி ரூபாயை சேமிக்க முடியும் என்று அவர் பரிந்துரைத்தார்.
  • தேர்தல்களின் முடிவுகள் ஏற்கனவே மக்களுக்குத் தெரிந்திருப்பதால், இவ்வளவு பெரிய தொகையை தேர்தலுக்காக செலவிடுவது தேவையற்றது. இவ்வாறு ரங்கோலி சாண்டல் அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவை பலரும் லைக் செய்து ரீ -ட்வீட் செய்து வருகிறார்கள். அந்த பதிவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/Rangoli_A/status/1249186070366949377?s=20

  • மேலும் பிரதமர் மோடியின் நடவடிக்கைகளும் திட்டங்களும் மக்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன. படிப்பறிவில்லாத கிராமத்தில் கூட பிரதமர் மோடியின் பெயரை பெருமையாக கூறுகிறார்கள். நாம் மற்ற வல்லரசு நாடுகளை வாய் பிளந்து பார்த்த காலம்சென்று இன்று அந்த நாடுகள் இந்தியாவை வாய் பிளந்து பார்க்கிறது. இதற்கு காரணம் நமது பாரத பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Share it if you like it