இந்தியாவில் வைரஸை விட வேகமாக பரவும் புது நோய் !

இந்தியாவில் வைரஸை விட வேகமாக பரவும் புது நோய் !

Share it if you like it

இன்றைய நிலையில் கொரோனா வைரஸின் தாக்கத்தை விட அதுகுறித்த வதந்திகள் தான் வெகு வேகமாக பரவி வருகிறது. அவற்றில் இன்று அரசாங்கம் நாடு முழுவதும் ஒரு மருந்துப்பொடியை தூவ போவதாகவும் அதனால் வைரஸ் அழிந்து விடும் என்றும், இன்று அமாவாசை மற்றும் ரேவதி நட்ஷத்திரம் ஒன்றாக வருவதால் இன்றைய தினத்தில் மாலை வேளையில் அனைவரும் கை தட்டினால் வைரஸ் அழிந்துவிடும் என்றும் பலவாறாக பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அமாவாசை 24,மற்றும் ரேவதி நட்சத்திரம் 25 ஆகிய தேதிகளில் தான் வருகிறது. எனவே அதிகார பூர்வமாக செய்திகளில் வெளிவராத விஷயத்தை மக்கள் புறக்கணிப்பது நன்று.


Share it if you like it