இந்தியாவை மீண்டும் பிளவுப்படுத்த முயற்சிக்கும்  காங்கிரஸ்!

இந்தியாவை மீண்டும் பிளவுப்படுத்த முயற்சிக்கும் காங்கிரஸ்!

Share it if you like it

குடியுரிமையை திருத்தச்சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி மக்களிடையே குழப்பத்தையும் பிரிவினைக்கு ஆதரவாகவும் பேசி வருவது அவர்களின் இரத்தத்தில் ஊறிய ஒன்று என்பது அனைவரும் அறிந்தே.

இந்தியாவை  மூன்றாக  உடைத்த காங்கிரஸ் செய்த வரலாற்று பிழையை யாரும் மறக்க முடியா வடுவாக அனைவரின் இதயங்களிலும்  உள்ளது.  இந்நிலையில் கடந்த ஜனவரி 30 அன்று பிரபல தொலைக்காட்சியில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நடந்த  நிகழ்ச்சியில்   பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அஜய் வர்மா.

நான் இந்திய அரசுக்கு சாவல் விடுகிறேன், தைரியம் இருந்தால் 25 கோடி இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தானை போல தனி நாட்டினை பிரித்து கொடுத்துவிட்டு, இந்தியாவை ஹிந்து ராஷ்ட்ரா என்று அறிவியுங்கள்” என்றார்.

1947ல் எவ்வாறு தேசத்தினை நாசப்படுத்தியதோ  அதே கொடுர எண்ணத்தில்  சிறிதளவும் மாற்றமடையவில்லை என்பதை நன்கு உணர முடிகிறது. இந்தியாவை கூறுப்போடும் போக்கு அன்றைய காங்கிரஸ்கார்கள் முதல் இன்றைய செய்தி தொடர்பாளர் வரை அதே வெறி தொடர்வதாக அனைவரின் கருத்தாக உள்ளது.


Share it if you like it