இந்திய வெறுப்பு, கம்யூனிஸ்ட்களின் பொழப்பு, மக்கள் கடுப்பு!

இந்திய வெறுப்பு, கம்யூனிஸ்ட்களின் பொழப்பு, மக்கள் கடுப்பு!

Share it if you like it

அரசிற்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது மற்ற நாட்டு எதிர்க்கட்சிகள். ஆனால் இந்தியாவில் மட்டுமே எதிலும் அரசியல், எங்கும் அரசியல், என்னும் கீழ்த்தரமாக பல கட்சிகள் செயல்படுகிறது என்று மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இந்திய சிபிஜ(எம்) கட்சி தனது அதிராகபூர்வ டுவிட்டர் பக்கதில் இவ்வாறு கூறியுள்ளது.

வருமானத்துக்கு வேலையில்லை, உண்ண உணவில்லை. உயிர்காக்கும் மருத்துவம் இல்லை, பிழைக்கவே வழியில்லை, எல்லோரும் அழிந்து கொண்டிருக்கிறோம். நிதானமாகவே யோசியுங்கள். அவசரம் ஒன்றுமில்லை.

  • கொரோனாவை உலகம் முழுவதும் பரப்பிய சீனாவிற்கு இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை.
  • டூப்ளிகேட் மருத்துவ உபகரணங்களை, ஏற்றுமதி செய்து உலக நாடுகளிடம் செருப்படி வாங்கிய சீனாவிற்கு இதுவரை கண்டனம் தெரிவிக்கல்லை.
  • மனிதாபிமான அடிப்படையில், உலக நாடுகளுக்கு மருந்து பொருட்களை, ஏற்றுமதி செய்த இந்தியாவிற்கு இதுவரை வாழ்த்து இல்லை.
  • உலக சுகாதார அமைப்பு மற்றும் வல்லரசு நாடுகளின் பத்திரிக்கைகள்  இந்தியாவை பாராட்டியது கண்ணுக்கு தெரியவில்லை.
  • தமிழக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியார்கள், காவலர்களின், தியாகத்தை அவமதிக்கும் உங்கள் சோற்றில் கொஞ்சமாவது டாடா உப்பை சேர்த்துக்கொள்ளுங்கள். என்று நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share it if you like it