இனி எங்களுக்கு போரா – நெவர் – மீண்டும் ஒளிபரப்பாகும் பிரபல ராமாயண தொடர் !

இனி எங்களுக்கு போரா – நெவர் – மீண்டும் ஒளிபரப்பாகும் பிரபல ராமாயண தொடர் !

Share it if you like it

ராமானந்த் சாகரின் ராமாயணம் தொடர் தூர்தர்சனில் முன்னதாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது கொரோனாவால் மத்திய அரசு 144 தடையை அமல்படுத்தியதால் மக்கள் எங்கும் வெளியில் செல்லாத நிலை ஏற்பட்டு வீட்டில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் தங்கள் பொழுதை இனிமையாக கழிக்க அந்த ராமாயண தொடரை மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மக்களின் கோரிக்கையை தொடர்ந்து தொலைக்காட்சியில் மீண்டும் ராமானந்த் சாகர் ராமாயணம் ஒளிபரப்பப்படும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெள்ளிக்கிழமை தான் பதிவிட்ட ஒரு ட்வீட்டில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களும் பார்த்து ரசித்த ராமாயணம் மெகா தொடர், சனிக்கிழமை முதல் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது.


Share it if you like it