இனி எங்கும் தமிழ் எதிலும் தமிழ்- தமிழக அரசு!

இனி எங்கும் தமிழ் எதிலும் தமிழ்- தமிழக அரசு!

Share it if you like it

தமிழ் மொழியின் மேன்மையை பறைசாற்றவும், எதிர்கால இளைய சமூதாயத்தினருக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருக்க மாநில அரசு மேற்கொண்டு இருக்கும் இத்தகைய முயற்சி பாராட்டுக்குரியது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் 1018 ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்கு இணையான ஆங்கில உச்சரிப்புக்கு மாற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்தியா விடுதலை அடைந்து 73 ஆண்டுகளாகியும் இன்னும் விலகாத ஆங்கிலத் தன்மையை விரட்டும் இந்த முயற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்!

  • டாக்டர் ராமதாஸ் பதிவு

இது வரவேற்கத் தக்கது. தமிழக அரசுக்கு எமது பாராட்டுகள். நன்றி. ADAYAR( அடையார்) என எழுதுவதை இனியாவது ADAIYAARU (அடையாறு)எனவும் PALAR(பாலார்) என எழுதுவதை PAALAARU( பாலாறு) எனவும் எழுதட்டும். Portonovo என்பதை PARANGIPETTAI (பரங்கிப்பேட்டை) என்றே ஆங்கிலத்திலும் எழுதட்டும்.

  • திருமாவளவன் பதிவு

Image


Share it if you like it