தமிழக மக்களை குழப்ப அடுத்த புருடாவிற்கு ரெடியாகும்- திருமுருகன் காந்தி!

தமிழக மக்களை குழப்ப அடுத்த புருடாவிற்கு ரெடியாகும்- திருமுருகன் காந்தி!

Share it if you like it

ஜாதி, மதம், இனம், கடந்து தமிழக மக்கள் ஒற்றுமையாக வாழவே விரும்புகின்றனர். ஆனால் தமிழகத்தில் தி.க, திமுக, மிஷநரிகள், சில அடிப்படைவாத கட்சிகள்  தொடங்கி, சில்லறை போராளிகள் வரை, தொடர்ந்து மக்களிடையே, வேற்றுமையை திணித்து வருகின்றனர் என தமிழக மக்கள், குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் திருமுருகன் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பறிபோகும் மாநில உரிமைகள்’ வீடு, விவசாயம், விசைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் இரத்தாக போகிறதா? நாளை (மே 1) காலை 11 மணிக்கு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மே 17 இயக்க முகநூலில் நேரலையில் பேசுகிறார். என்று அப்பதிவியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழைகள் பட்டினியில் சாக போகிறார்கள், ரேஷன் கடைகள் இருக்காது. போராட்டம் வெடிக்கும் என்று தமிழக மக்களிடையே, குழப்பதை விளைவிக்கும் நோக்கில் பொய்களை அள்ளி தெளித்தார். ஆனால் இன்று வரை ரேஷன் கடைகள் தொடர்ந்து செயல்படுகிறது என்று நெட்டிசன்கள் டுவிட்டரில், அவருக்கு பூஸ்ட் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it