இளைஞர்களை மூளைச்சலவை செய்து பைத்தியமாக்கிய பிரிவினைவாதிக்கு  இரங்கல் தெரிவித்த சீமான்..!

இளைஞர்களை மூளைச்சலவை செய்து பைத்தியமாக்கிய பிரிவினைவாதிக்கு  இரங்கல் தெரிவித்த சீமான்..!

Share it if you like it

காஷ்மீரை சேர்ந்த சையத் அலி ஷா கிலானியின் மரணத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல்.

பாகிஸ்தான் துணையுடன் ஜம்மூ காஷ்மீர் மக்களின் நிம்மதியை அழித்தவர்கள் பலர் அதில் மிக முக்கியமான நபர்களில் சையத் அலி ஷா கிலானியும் ஒருவர். அப்பாவி காஷ்மீர் இளைஞர்களின் மனதிலும், எண்ணத்திலும், வெறி பிடிக்கும் அளவிற்கு மதவெறியையும், பிரிவினையையும், திணித்தவர் கிலானி.

மூளைச்சலவை செய்த அப்பாவி இளைஞர்களை கொண்டு பாரத தேசத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட வைத்தது மட்டுமில்லாமல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் மக்களின் நிம்மதியையும், அப்பகுதியில் ரத்த ஆறு ஓட காரணமாக இருந்தவர்.

வாழும் நாட்டிற்கு துளியும் விசுவாசம் இல்லாத பிரிவினைவாதிக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்து இருப்பதன் மூலம் அவரின் உண்மையான சுயரூபத்தை அப்பாவி தம்பிகள், தங்கைகள், புரிந்து கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 


Share it if you like it